தமிழ் பாடல் வரிகள்


Channel's geo and language: India, Tamil
Category: Music


Tamil Lyrics

Related channels

Channel's geo and language
India, Tamil
Category
Music
Statistics
Posts filter


Forward from: தமிழ் status videos
Rip 😭😭




❀•❀┈┉┅━❀•• [077] ••❀━┅┉┈​​​​​​​​​​❀•❀

ஆடாத ஆட்டமெல்லாம் - Adatha Attamellam

┈┉┅━❀••🌺 @Tamillyric 🌺••❀━┅┉┈​​​​​​​​​​

திரைப்படம் : மௌனம் பேசியதே

பாடகா் : காா்த்திக்

இசை : யுவன் சங்கா் ராஜா

வரிகள் : சினேகன்

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா...

ஆண் : நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு
புரியுமா...

ஆண் : ஹேய் வாழ்க்கை இங்க
யாருக்கும் சொந்தம் இல்லையே...
வந்தவனும் வருபவனும்
நிலைப்பதில்லையே... ஏன் நீயும்
நானும் நூறு வருஷம்
இருப்பதில்லை பாரு

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போற கதை உனக்கு தொியுமா...

ஆண் : நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு
புரியுமா...

ஆண் : ஆஆஆ………………

ஆண் : நித்தம் கோடி
சுகங்கள் தேடி கண்கள்
மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும்
மேலும் சோ்த்து கொண்டே
போகின்றோம்

ஆண் : மனிதன் என்னும்
வேடம் போட்டு மிருகமாக
வாழ்கின்றோம் தீா்ப்பு ஒன்று
இருப்பதை மறந்து தீமைகள்
செய்கின்றோம்

ஆண் : காலம் மீண்டும்
திரும்பாதே பாதை மாறி
போகாதே பூமி கொஞ்சம்
குலுங்கினாலே நின்று
போகும் ஆட்டமே

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போற கதை உனக்கு தொியுமா...

ஆண் : நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு
புாியுமா...

குழு : ……………………………….

ஆண் : ஹேய் கருவறைக்குள்
காணாத கத்து கொண்ட சிறு
ஆட்டம் தொட்டிலுக்குள் சுகமாக
தொடரும் ஆட்டமே பருவம் பூக்கும்
நேரத்தில் காதல் செய்ய போராட்டம்

ஆண் : காதல் வந்த
பின்னாலே போதை
ஆட்டமே.. பேருக்காக
ஒரு ஆட்டம் காசுக்காக
பல ஆட்டம் எட்டு காலில்
போகும் போது ஊரு போடும்
ஆட்டமே..

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போற கதை உனக்கு தொியுமா...

ஆண் : நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு
புரியுமா...

ஆண் : ஹேய் வாழ்க்கை இங்க
யாருக்கும் சொந்தம் இல்லையே...
வந்தவனும் வருபவனும்
நிலைப்பதில்லையே... ஏன் நீயும்
நானும் நூறு வருஷம்
இருப்பதில்லை பாரு

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போற கதை உனக்கு தொியுமா...

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​






❀•❀┈┉┅━❀•• [076] ••❀━┅┉┈​​​​​​​​​​❀•❀

முத்து மணி மாலை - Muthumani Malai

┈┉┅━❀••🌺 @Tamillyric 🌺••❀━┅┉┈​​​​​​​​​​

திரைப்படம் : சின்ன கவுண்டர்(1992)

பாடியவர்கள் : பி.சுசீலா, எஸ்.பி.பால சுப்ரமணியம்

இசை : இளையராஜா

வரிகள் : ஆர்.வி.உதயகுமார்

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​

ஆண் : முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெக்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே

ஆண் : முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட

பெண் : கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா

ஆண் : மேகம் தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண் : நேசபட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு தந்த ராசாவே

ஆண் : வாக்கபட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே

பெண் : தாழம் பூவில வீசும் காத்தில
பாசம் தேடி மாமா வா

ஆண் : முத்து மணி மாலை

பெண் : என்னை தொட்டு தொட்டு தாலாட்ட

ஆண் : வெக்கத்தில சேலை

பெண் : கொஞ்சம் விட்டு விட்டு போராட

ஆண் : காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே

பெண் : கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

ஆண் : நெத்தி சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நான் தானே

பெண் : அத்தி மரபூவும் அச்சபடுமா
பக்கதுணையாரு நீதானே

ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேச தேகம் சூடேர

பெண் : முத்து மணி மாலை
என்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமரும் நீ தானே
இது நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே

ஆண் : ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே...

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​






❀•❀┈┉┅━❀•• [075] ••❀━┅┉┈​​​​​​​​​​❀•❀

முன் பனியா முதல் மழையா - Mun Paniya Mudhal Mazhaiya

┈┉┅━❀••🌺 @Tamillyric 🌺••❀━┅┉┈​​​​​​​​​​

திரைப்படம் : நந்தா (2001)

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், மால்குடி சுபா

இசை : யுவன் சங்கர் ராஜா

வரிகள் : பழனி பாரதி

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​

ஆண் : முன் பனியா
முதல் மழையா என்
மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹேஹோ...
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே

ஆண் : முன் பனியா
முதல் மழையா என்
மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
ஹேஹோ...

பெண் : மனசில் எதையோ
மறைக்கும் கிளியே மனசைத்
திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது
எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு
ரகசியம் இருக்கு மனசைத்
திறந்து சொல்லடி வெளியே...

ஆண் : என் இதயத்தை
என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து
தொலைத்துவிட்டேன்
உன் விழியினில் உன்
விழியினில் அதனை
இப்போது கண்டு பிடித்து
விட்டேன் இதுவரை
எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன்
புன்னகையில் வாழ்கிறேன்
நான் உன் மூச்சிலே... ஏ...

ஆண் : முன் பனியா
முதல் மழையா என்
மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஏ…ஹோ…

ஆண் : முன் பனியா
முதல் மழையா என்
மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஏ...

பெண் : சலங்கை குலுங்க
ஓடும் அலையே சங்கதி
என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ
துள்ளுவது எதுக்கு நிலவ
பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ...

ஆண் : என் பாதைகள்
என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து
முடியுதடி என் இரவுகள்
என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய
ஏங்குதடி

ஆண் : இரவையும்
பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி
விட்டாய் மூழ்கினேன் நான்
உன் கண்ணிலே...ஏய்...

விஷ்லிங் : ………………………..

ஆண் : முன் பனியா
முதல் மழையா என்
மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஏ……

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​




❀•❀┈┉┅━❀•• [074] ••❀━┅┉┈​​​​​​​​​​❀•❀

பொன்வானம் பன்னீர் தூவுது - Ponvaanam Panneer Thoovuthu


┈┉┅━❀••🌺 @tamillyric 🌺••❀━┅┉┈​​​​​​​​​​

திரைப்படம் : இன்று நீ நாளை நான் (1983)

பாடகர் : எஸ்.ஜானகி

இசை : இளையராஜா

வரிகள் : வைரமுத்து

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா...
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​




❀•❀┈┉┅━❀•• [073] ••❀━┅┉┈​​​​​​​​​​❀•❀

மானம் இடி இடிக்க - Maanam Idi Idikka

┈┉┅━❀••🌺 @tamillyric 🌺••❀━┅┉┈​​​​​​​​​​

திரைப்படம் : உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்

பாடகா்கள் : எஸ்.பி பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

இசை : இளையராஜா

வரிகள் : பிறைசூடன்

வருடம் : 1992

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​

குழு : .............. ..... ............

ஆண் : மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

நெனச்சது பலிச்சதம்மா, எனக்கது கெடச்சதம்மா
என்னம்மா, சொல்லம்மா, கண்ணம்மா, கையத்தொட்டு

பெண் : மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

குழு : ........... ....... .............

பெண் : சின்னச்சின்ன ஆச, என்னத் தொட்டுப் பேச, கன்னி மனம் கூச
அங்கு காதல் வாசம் வீச, இது காமன் போட்ட பூஜ

ஆண் : மொட்டு மல்லி மால, கட்டி வச்ச வேள, பட்டுக்கூறச் சேல
தொட்டுக் கட்டிப் பாக்கும் சோல, மேளம் கொட்டிப் பாடும் வேள

பெண் : ஆளான அழகான கொடிதானையா
அதில் பூத்த புதுப் பூவில் தேன்தானையா

ஆண் : தேன் அள்ளி நான் உண்ண திரை ஏதம்மா
திரளான சுகம் காட்டும் கரை நானம்மா

பெண் : வெட்கமா சொர்க்கமா விட்டு விட்டு செல்லுமா
பக்கமா வந்துதான் மொத்தம்மா பலன் தரும்

மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

நெனச்சது பலிச்சதையா, எனக்கது கெடச்சதையா
என்னையா சொல்லையா, கண்ணம்மா கையத்தொட்டு

ஆண் : மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

குழு : ........... ........ ............

ஆண் : பொன்னுமணி பூட்டி, பூவிலங்கு சூட்டி, கன்னி வரும் நேரம்
அப்போ தன்னால் தீரும் பாரம் அதன் பின்னால் போத ஏறும்

பெண் : கட்டிலுக்கு மேலே, ரெட்டக் கிளி போலே, ஒட்டி நின்னு பாடும்
இளம்வட்டம் மோகம் தேடும், அதில் சொர்க்கம் நேரில் கூடும்

ஆண் : வாழ்நாளில் நினைக்காத புது நாளிது
காணாத கலையாத கலைதான் இது

பெண் : தேனோடு தினையாக இணையானது
மானோடு மானாக துணையானது

ஆண் : எண்ணந்தான் துள்ளுது, என்னமோ சொல்லுது
கண்ணம்மா, வண்ணமா, இன்பமா, பொங்கி வரும்

ஆண் : மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்

பெண் : இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

ஆண் : நெனச்சது பலிச்சதம்மா, எனக்கது கெடச்சதம்மா

பெண் : என்னையா, சொல்லையா, கண்ணம்மா கையத்தொட்டு

பெண் : மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​


அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்




❀•❀┈┉┅━❀•• [072] ••❀━┅┉┈​​​​​​​​​​❀•❀

ஓ நெஞ்சே நெஞ்சே - Oh Nenje Nenje


┈┉┅━❀••🌺 @tamillyric 🌺••❀━┅┉┈​​​​​​​​​​

திரைப்படம் : முகவரி

பாடகர்கள் : ஹரிசரண், சுவர்ணலதா

இசை : தேவா

வரிகள் : வைரமுத்து

வருடம் : 2003

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​

ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்

நீ நட்சத்திரங்களில் வாழவே கனா காண்கிறாய்

நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும்

உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில்

பெண் : அன்பே அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு

விண்ணை தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு

தத்தா தத்தா தத்தாரத்தாரதா
தத்தா தத்தா தத்தாரத்தாரதாரா

குழு : தத்தாராரிரா தத்தாராரிரா தத்தாராரிரிராரரே...

தத்தாராரிரா தத்தாராரிரா தத்தாராரிரிராரரே...

பெண் : காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி

என் காலம் நடக்கட்டுமே என் தேவா

உன் மார்பில் சாய்ந்தபடி

ஆண் : ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி

இறந்தாலும் உயிர் ஊட்டும் உந்தன் விரல்களின் ஸ்பரிசமடி

பெண் : நான் சொல்லும் சொல்லை கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய்

சங்கீத ராஜாங்கத்தின் கிரீடம் கொள்வாய் கிரீடம் கொள்வாய்

ஆண் : பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு

பொன்னும் முத்தம் நான் கொட்டித்தர வேண்டும்

அன்பே அன்பே உன் அன்பு சொல் வேண்டும்

இன்னும் சொல்லு என் ரத்தம் ஊர வேண்டும்

பெண் : ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

குழு : காலேஜு காலேஜு அக்கா எந்தக் காலேஜு

அக்டோபர் நவம்பர் எந்த மாசம் மேரேஜு

ஹாட்டோட பீட்டு எல்லாம்
லவ் லவ் லவ் லவ்

ஆண் : சந்தர்ப்பம் அமைந்து விட்டால் பெண் பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன்

காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசை அமைப்பேன்

கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணை இருப்பேன்

இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்

என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன் இதயத்தின் ஓசை கேளு

என் நெஞ்சில் ஒட்டி செல்லும் பாட்டு கேட்டு மெட்டு போடு

ஆண் : பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்

சத்தம் சிந்தும் உன் முத்தம் கூட நாதம்

வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்

என்றும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்

ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்

நீ நட்சத்திரங்களில் வாழவே கனா காண்கிறாய்

நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும்

உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில்

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​


Video is unavailable for watching
Show in Telegram




❀•❀┈┉┅━❀•• [071] ••❀━┅┉┈​​​​​​​​​​❀•❀

காதல் வளர்த்தேன் - Kadhal Valarthen


┈┉┅━❀••🌺 @tamillyric 🌺••❀━┅┉┈​​​​​​​​​​

திரைப்படம் : மன்மதன்

பாடகா் : கே கே

இசை : யுவன் சங்கர் ராஜா

வரிகள் : நா. முத்துக்குமார்

வருடம் : 2004

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருக்குள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

ஏ... இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சேன்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள...
உன்னை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏ புள்ள...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உசுருக்குள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

குழு : ஆஹா... ஹா... ஆஹா... ஹா... ஹா... ஆஹா... ஹா... ஆஹா... ஹா... ஹா ... ... ... ...

பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாதா...
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா...
பல கோடி பெண்கள் தான்...
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பரித்து சென்றவள் நீயடி...
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம்
தானே... தானே...
உனது பேரெழுதி பக்கத்திலே
எனது பேரை நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்...

ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சேன்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள... உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரனம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே...
என் விழிகள் வாழுதே...
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி...
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணெ
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே...
தந்தை அன்பு அது பிறக்கும் வரை...
தாயின் அன்பு அது வளரும் வரை...
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ...
உயிரொடு வாழும் வரை...
அடியே ஏ புள்ள புள்ள...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உசுருக்குள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவை நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சேன்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏ புள்ள...

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈​​​​​​​​​



20 last posts shown.

2 047

subscribers
Channel statistics