Фильтр публикаций


*சென்னையில் மார்ச் 30 ஞாயிறு அன்று உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! வாருங்கள் !*

28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் 05.01.2025 அன்று முடிவடைந்துவிட்ட நிலையில், அரசியல் சாசனப்படி அதற்கு முன்பாக நடத்த வேண்டிய ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாமல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் கிளையாக செயல்பட்டு வருகிறது.
மத்தியல் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி ஆனால் உள்ளாட்சியில் மட்டும் பிரதிநிதிகளே இல்லாத தகர டப்பா ஆட்சியா @mkstalin ?

28 மாவட்டங்களில்,கிராமப்புற உள்ளாட்சிகளில் 91,975 காலியிடங்கள் இருப்பதால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தண்ணீர், தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளுக்குக் கூட அவர்கள் அல்லல்படும் நிலை பல இடங்களில் உள்ளது .இது குறித்து தன்னாட்சி அமைப்பு தமிழ்நாடு முழுவதும் பயணித்து உள்ளாட்சி பிரதிநிதி இல்லாததால் மக்கள் படும் பிரச்சனைகளை நேரடியாக கண்டறிந்துள்ளது.

தேர்தல்கள்தான் ஜனநாயகத்தின் உயிர்நாடி. எனவே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் தமிழ்நாடு அரசும் இப்பிரச்னையில் உடனடி நடவடிக்கை எடுத்து தேர்தல் நடத்த கோரி, தன்னாட்சி, அறப்போர் இயக்கம், Voice of People, IGG மற்றும் தோழன் ஆகிய அமைப்புகள் சார்பாக, அறவழி உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த உள்ளோம். வரும் ஞாயிறு உங்கள் வேளைகளில் இதற்காக ஒரு சில நேரம் ஒதுக்கி கலந்து கொள்ளுங்கள்.

நாள்: 30.03.2025-ஞாயிறு
நேரம்: 9 AM முதல் 5 PM வரை
இடம்: இராஜரத்தினம் மைதானம் அருகில், எழும்பூர், சென்னை

https://youtu.be/e1P6R_1Uwz4


அறப்போர் இயக்கத்தில் திருச்சி, மதுரை அல்லது கோவை மாவட்டங்களில் முழு நேர கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்கில் விண்ணப்பிக்கலாம். அல்லது contact@arappor.org மின்னஞ்சலுக்கு உங்கள் CV அனுப்பலாம்.
Apply here!
https://arappor.org/Recruitments-FieldCoordinator






அறப்போர் இயக்கத்தின் 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்னும் பிரச்சாரத்தை உங்கள் பகுதியில் நீங்கள் மேற்கொள்ள விருப்பமா ?? பிரச்சாரத்தில் பங்குபெற இன்றே பதிவு செய்யுங்கள். https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg

தேர்தல் என்றாலே, வேட்பாளர்கள் யார்? எந்த கட்சிகள் போட்டி போடுகிறது? யார் அவர்கள் என்ற கேள்விகளை தாண்டி, தற்போழுது 'யார் வருவார்கள், எவ்வளவு கொடுப்பார்கள்' என்பதே நாம் பேசும் செய்தியாகி விட்டது.

இப்படி, ஓட்டுக்கு பணம் என்பது சகஜமாகி விட்ட இன்றைய சூழல் என்ன கிடைத்தது நமக்கு?

1. அன்றாடம் எதிர் கொள்ளும் நமது அத்தியவாசிய பிரச்சனைகளை பற்றி கேள்வி கேட்க முடிகிறதா ?

2. தரமான சாலை, குடிநீர் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை கேட்க முடிகிறதா?

3. தரமான மருத்துவம், தரமான கல்வி என எது குறித்தாவது கேட்க முடிகிறதா?

நமது ஓட்டை நாம் விற்பதாலே கேள்வி கேட்கும் தார்மீக உரிமையையும் இழந்து விடுகிறோம். சில நூறுகளை கொடுத்து விட்டு பல கோடிகளை கொள்ளையடிப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

அப்படியே கேட்டாலும், 'சும்மாவா ஓட்டு போட்ட' நம் விரலை கொண்டே நம் கேள்விகளை தட்டிவிடுகிறார்கள். மேலும் அவர்களின் திருட்டு பணத்தில் நாமும் அல்லவா பங்கு கொள்கிறோம்.

என்ன தான் தீர்வு?

நாம் ஒவ்வொருவரும் மாறினால் தான் இந்த அவல நிலையை மாற்ற முடியும். நேர்மையான சமூகத்தை விரும்பும் நாம் நேர்மையாக நடப்பது மிக அவசியம். பணம் வாங்கி கொண்டு உங்கள் தரத்தை தாழ்த்தி சுயமரியாதையை இழக்க போகிறீர்களா?? அல்லது ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்வழியில் நடந்து சுயமரியாதையுடன் இருக்க போகிறீர்களா??
முடிவு உங்கள் கையில்!

மக்கள் எவ்வழியோ, நம்மை ஆட்சி செய்பவர்களும் அவ்வழியே, மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டுமே!

நம் ஓட்டு நம் உரிமை!
என் ஓட்டு விற்பனைக்கு அல்ல!
நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்!

Register now to join the campaign!
https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg


Arappor Iyakkam strongly condemns the attack on
Savukku Shankar’s house

சவுக்கு சங்கர் மற்றும் அவரது தாயார் மீதான வன்முறை மற்றும் அருவருப்பான தாக்குதலை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.




இனி உங்கள் வாக்கை விற்காதீர்கள். தமிழ் நாடாக வெல்வோம்!

அறப்போர் இயக்கத்தின் பிரச்சாரத்தில் பங்குபெற இன்றே பதிவு செய்யுங்கள். https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg

ஓட்டுக்காக மக்களுக்கு அரசியல்வாதிகள் கொடுக்கும் பணம் என்பது அவர்கள் நம்மிடமிருந்து திருடிய பணம். நம்மிடமே திருடி, அதிலிருந்து ஒரு சிறு பங்கை நமக்கே திருப்பி கொடுத்து, அடுத்த 5 வருடம் நம்மிடமிருந்து மீண்டும் பெரியளவில் திருடவே அவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். இந்த திருட்டுப் பணத்தை நாம் வாங்கிக் கொண்டால் , அவர்கள் செய்யும் திருட்டில் நாமும் பங்கு கொள்கிறோம் என்று அர்த்தம். நம்மிடமிருந்து திருடிய பணம் தானே என்றும் , ஒரு வார செலவுக்கு ஆகும் என்றும் ஏதோ காரணங்களுக்காக நாம் இன்று வாங்கிக் கொள்ளும் பணம், அடுத்த 5 வருடங்கள் அவர்கள் திருடுவதற்கு நாம் கொடுக்கும் லைசென்ஸ் ஆகும்.

இன்று பணம் வாங்கிக் கொண்டு நாளை அரசிடம் குறை கூறினால், பணம் வாங்கிக் கொண்டு தானே வாக்கு அளித்தாய் என்ற ஏளன வார்த்தைகளையும் நம்மை நோக்கியே கூறுவர். வாக்களிப்பது நம் உரிமை அதனை எதற்கு நாம் விற்க வேண்டும். இது ஒரு பேர் அதிகாரம். நாம் வாக்களித்து பதவிக்கு வருபவர் பொறுப்புடன் நமக்கு சேவை செய்ய வைப்பதே நம் உரிமை மற்றும் கடமை ஆகும்.

நாம் யாரும் நம் கடமையை செய்ய லஞ்சம் வாங்கவில்லை என்றால் அவர்கள் வேறு வழி இன்றி தங்கள் கடமையை செய்தே வெற்றி பெற முடியும். நம் தலை சிறந்த உரிமையை இந்த சிறு தொகைக்காக விற்று விட வேண்டாம். நம்மிலிருந்து தொடங்கும் இந்த மாற்றம் நம்மை ஆள்பவர்களையும் மாற்றும் வல்லமை உடையது.

இந்த பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் எடுத்து செல்ல, உங்கள் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள பதிவு செய்வீர்

https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg


என் ஓட்டு விற்பனைக்கு அல்ல

2026 தேர்தலுக்கு முன்பாக ‘என் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்னும் தமிழ்நாடு தழுவிய பிரச்சாரத்தை அறப்போர் இயக்கம் மேற்கொள்ள உள்ளது. நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கிராமம் மற்றும் நகர பகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய நீங்கள் தயாரா?? தமிழ்நாட்டில் நீங்கள் எங்கு இருந்தாலும் கீழ்க்கண்ட இணையதள லிங்கில் இன்றைய தினமே பதிவு செய்யவும்
https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg

மக்கள் நாம் எவ்வழியோ நம்மை ஆட்சி செய்பவர்களும் அவ்வழியே. அரசியல்வாதிகள் மக்களிடம் திருடும் பணத்தை நீங்கள் பணமாகவோ பொருளாகவோ வாங்குவதன் மூலம் நாமும் அந்த திருட்டில் பங்கு கொள்கிறோம் ! அவர்கள் கொடுக்கும் பணம் நமது ஒரு சில நாள் செலவுகளுக்கு உதவலாம். ஆனால் ஓட்டுக்கு பணம் வாங்குவது என்பது நமக்கான சாலை, குடிநீர், வீடு என அனைத்து அடிப்படை வசதியிலும் பல கோடிகள் அரசியல்வாதி கொள்ளை அடிக்க நாம் கொடுக்கும் லைசென்ஸ்! மேலும் அந்த அரசியல்வாதியை கேள்வி கேட்கும் தார்மீக உரிமையை நாம் இழந்து விடுகிறோம்!

பணம் கொடுப்பவர்கள் நிறுத்தட்டும், நான் நிறுத்துகிறேன், நான் வாங்கவில்லை என்றால் என் பணத்தை வேறு யாராவது ஒருவர் வாங்கி விடுவார் போன்ற ஏதோ ஒரு சாக்கை சொல்லி இந்த திருட்டில் நாமும் பங்கு கொள்ள வேண்டுமா என்று சிந்தியுங்கள். நாம் ஒவ்வொருவரும் மாறினால் தான் இந்த அவல நிலையை மாற்ற முடியும். நேர்மையான சமூகத்தை விரும்பும் நாம் நேர்மையாக நடப்பது அவசியம். பணம் வாங்கி கொண்டு நம் தரத்தை தாழ்த்தி சுயமரியாதையை இழக்க போகிறோமா?? அல்லது ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்வழியில் நடந்து சுயமரியாதையுடன் இருக்க போகிறோமா?? முடிவு நம் கையில்!

மற்றொருபுறம் வேட்பாளர்களை பணம் கொடுக்க வேண்டாம் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. பிரச்சாரத்தில் இணையுங்கள்!

நம் ஓட்டு நம் உரிமை!
என் ஓட்டு விற்பனைக்கு அல்ல!
நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்!

Register to participate in the campaign!
https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg








Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram


அறப்போர் பெண் தன்னார்வலர்கள் சந்திப்பு

நாளை காலை 10.30 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் சந்திப்போம்.
Location:
https://maps.app.goo.gl/4duevyxHzjeC98F47


ரூ 992 கோடி ரேஷன் ஊழல் புகாரில் அனைத்து ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம். ஒரு அமைச்சர் அதன் மீது விசாரணை நடத்தாமல் அடுத்தே நாளே மறுக்கிறார். அமைச்சரின் வெற்று மறுப்பு அறிக்கைக்கு அறப்போரின் காட்டமான பதில் !

உங்களால் இந்த ஊழலில் நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் ராஜினாமா செய்யுங்கள் அமைச்சரே ! @r_sakkarapani @mkstalin
https://youtu.be/lwdzp1UJ6vM?si=gEAbgwfkqJaX_0-G


ஊழலால், முறைகேடுகளால், அரசின் தவறான கொள்கைகளால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது பெண்கள். ரேஷன் கடை முதல் டாஸ்மாக் வரை...

அறப்போரின் பெண் தன்னார்வலர்கள் கூட்டம் வருகிற ஞாயிறு காலை 10:30 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. அறப்போரில் புதிதாக இணைய விரும்பும் பெண் தன்னார்வலர்களே வாருங்கள்!

சந்திப்போம்! ஞாயிறு காலை 10:30 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில்!
Location:
https://maps.app.goo.gl/pUNazbwZUmhdNizn7




*ரூ 992 கோடி ரேஷன் ஊழல்*

சதிகார ஊழல் கும்பல்களிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்! ஊழலற்ற நாடாக மாற்றுவோம்!

*தமிழ்நாடு மக்கள் போராடுவார்கள்!*
*தமிழ்நாடு மக்கள் வெல்வார்கள்!*
https://youtu.be/T6yIRjQiwOY?feature=shared




*Big Corruption in paddy transportation! Take action Now!*

This Corruption shows how the central BJP Govt and the state DMK Govt colluded to swindle Rs 992 Crores of public exchequer. The tender state level committee consisted of central FCI and state govt food department officials.

Christy friedgram donates crores of money to BJP on one side and on the other side we learn that the central Govt's IAS officer of FCI who was part of the tender approval committee was asked to go on leave so that the tender could be awarded to Christy Kumarasamy linked firms at 107% more than the scheduled market rate using a junior officer. Who in the BJP Govt exerted that pressure? The tender committee gives its approval in the first month of forming the new Govt in 2024.

We warned the state Govt in October 2023 that Gopal IAS seems to have been brought in as food secretary to award the paddy transport tender at much higher than market rate to Christy related firms. Neither CM nor DVAC acted. The state senior officials including Gopal IAS also gave their approval to the huge scam in June 2024.

Finally tenders awarded in all districts to Christy kumarasamy linked firms at 107% more than market rate resulting in a huge Corruption of 992 crores. Are all the street fights between the BJP and DMK Govt a drama to score politically and on the other side form Corruption coalition inside to cheat and swindle the people ?? Such Corruption directly affects the poor!

File FIR now!
Cancel the tender now! If the Govt cancels the 2 year tender now, we can save around Rs 500 to Rs 600 crores

Показано 20 последних публикаций.