💥 விகடனின் வீழ்ச்சியை காட்டுகிறது: துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையார்> ஏன் முடக்கம்? Watch:
https://youtu.be/B8se18EZkPkவிகடன் கார்ட்டூன் மிகப் பெரும்பாலானோரைப் புண்படுத்தியுள்ளது.
உண்மையில் அது கார்ட்டூனே அல்ல. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அப்பத்திரிகை, பிரதமர் மீதான தன் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிடம் இந்தியா சரணடைந்து விட்டது, மோடியை ட்ரம்ப் அடிமைப்படுத்தி விட்டார் என்பது விகடனின் விமர்சனமாக இருந்தால், கார்ட்டூனை வேறு விதமாகப் போட முடியும். ட்ரம்புக்கு மோடி சேவகம் செய்வது போலவோ, அவர் ஸ்டைலாக உட்கார்ந்திருக்க, இவர் கை கட்டி பணிந்து நிற்பது போலவோ கார்ட்டூன் போட்டிருக்கலாம். அது கருத்து விமர்சனமாக இருந்திருக்கும்.
எந்த கருத்தையும் விமர்சிக்க பத்திரிகைகளுக்கு உரிமை உண்டு. ஆளையே தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அழகல்ல. அதுவும் சொந்த நாட்டின் பிரதமர் இன்னொரு நாட்டில் சிறைப்பட்டுள்ளது போன்ற சித்தரிப்பு நாட்டுப்பற்று அற்றது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> •
https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29ஒரு பத்திரிகையாளன் இன்னொரு பத்திரிகையை விமர்சிக்க நேர்வது வருத்தம் தருகிறது. ஆனால், பத்திரிகை உணர்வு என்ன, எந்த உணர்வையும் விட தேச உணர்வு மேலானது என்பதில் அடியேனுக்கு குழப்பம் இல்லை.
விகடன் நினைப்பது போல, அமெரிக்காவிடம் இந்தியா அடி பணிந்து விட்டது என்ற கருத்தும் தவறு.
ட்ரம்ப், மோடி மீது அதிகபட்ச மரியாதையைக் காட்டியிருக்கிறார். அமெரிக்காவில் மோடி நடத்தப்பட்ட விதம் இந்தியாவின் பெருமையை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.
இந்தியா எந்த உரிமையையும் அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்து விடவில்லை. மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரியை இந்தியாவுக்கு விதிக்கவில்லை. மோடி அமெரிக்காவுக்கு சென்றதன் நோக்கம் நிறைவேறியுள்ளது.
மோடியைப் பாராட்டி ஆதாயம் சம்பாதிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை. நாடு கண்ட பிரதமர்களில் மோடி சிறந்தவர் என்பதே என் பார்வை.
' தன் நாட்டுக்காக மோடி வாதாடுவது போல என்னால் முடியவில்லை ' என்று ட்ரம்பே ஒப்புக்கொண்டுள்ளார். ஊழலற்ற, நாடுப்பற்றும் நிர்வாகத் திறமையும் மிகுந்த மோடி ஒவ்வொரு கட்டத்திலும் தன் பதவிக்கு உண்மையாக இருப்பதாகவே பார்க்கிறேன்.
அவரை இப்படியொரு தரக்குறைவான கார்ட்டூன் மூலம் ஒரு பெரிய பத்திரிகை விமர்சித்திருப்பது அதன் வீழ்ச்சியையே காட்டுகிறது.
மோடியை இழிவுபடுத்துவதே வீரம் என்ற மோடி எதிர்ப்பாளர்களின் பிரசாரமே இதற்குக் காரணம்.