AL ILMUSH SHAREE


Гео и язык канала: Индия, Тамильский
Категория: Религия


இது குர்ஆன், ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்பதற்கான குழுமம்

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Категория
Религия
Статистика
Фильтр публикаций






بسم الله الرحمن الرحيم

தஃப்ஸீர் ஆயதுல் குர்ஸி - தொடர்

ஆயதுல் குர்ஸியில் அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா தொடர்ந்து கூறுகிறான்,

لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ

அவனுக்கே இந்த வானங்களிலும் பூமியிலும் இருக்கக்கூடிய அனைத்து படைப்பினங்களும் சொந்தமானது. 

இது அல்லாஹவுடைய பரிபூரணமான ஆட்சியை காட்டுகின்றது; மேலும் நாம் அனைவரும் அவனுடைய அடிமைகள் என்பதையும் அவன் எல்லாவற்றிற்கும் சொந்தக்காரன் என்பதையும் காட்டுகிறது.

இது சம்பந்தமாக அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா கூறுகிறான்

إِن كُلُّ مَن فِيْ ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَٱلۡأَرۡضِ إِلَّاۤ ءَاتِی ٱلرَّحۡمَـٰنِ عَبۡدࣰا

நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் அல்லாஹ்விற்கு அடிமையாக வருவார்கள்

அல்குர்ஆன் சூரா மரியம் 19:93

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

🎧 உரையை செவிமடுக்க..
t.me/al_ilmush_sharee/2185

~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...

t.me/al_ilmush_sharee
🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي






بسم الله الرحمن الرحيم

I هذه دعوتنا وعقيدتنا
இதுவே எங்கள் தஃவா!
இதுவே எங்கள் அகீதா!!

10/37

அல் இமாம் அல் முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

لا نكتب في كتاباتنا, ولا نُلقي في دروسنا, ولا نخطب إلاَّ بقرآن أو حديث صالح للحُجِّيَّة, ونكره ما يَصْدُرُ من كثير من الكُتَّاب والواعظين من الأقاصيص الباطلة, ومن الأحاديث الضعيفة والموضوعة.

குர்ஆன் மற்றும் ஆதாரம் பிடிக்கத் தகுந்த ஹதீஸை கொண்டே தவிர நாங்கள் எமது புத்தகங்களில் எழுதவோ; எமது பாடங்களில் குறிப்பிடவோ; எமது குத்பாக்களில்  பேசவோ மாட்டோம். மேலும் அதிகமான எழுத்தாளர்கள் மற்றும் உபதேசம் செய்பவர்களிடமிருந்து  வெளியாகக் கூடிய பொய்யான கதைகள் மற்றும் பலவீனமான இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்களை நாங்கள் வெறுக்கிறோம்.

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

ஆடியோவை செவிமடுக்க...
https://t.me/al_ilmush_sharee/2182
கால அளவு: நிமிடங்கள்

[ஸலஃபி போர்வையில் ஒளிந்து இருக்கும் முமையிஃ மற்றும் கவாரிஜ்களை பார்த்து ஏமாந்து போய் விட வேண்டாம். குர்ஆன் சுன்னாவை ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்தில் அடிப்படையில் கற்றுக்கொள்ள அதற்குரிய உண்மையான உலமாக்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.]

#هذه_دعوتنا_وعقيدتنا

~•~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...

t.me/al_ilmush_sharee
| AL ILMUSH SHAREE






بسم الله الرحمن الرحيم

தஃப்ஸீர் ஆயதுல் குர்ஸி - தொடர்

ஆயதுல் குர்ஸியில் அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா தொடர்ந்து கூறுகிறான்,

لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ

அல்லாஹ்வை சிறிய தூக்கமோ இல்லாவிட்டால் பெரிய தூக்கமோ ஒருபோதும் கைப்பற்றி விடாது அல்லது மிகைத்து விடாது என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இது அல்லாஹ்வுடைய பரிபூரணமான நிலைப்பாட்டையும்; பரிபூரணமான வாழ்க்கையையும்; மேலும் அவன் சுயமாக உறுதியாக நிலையாக இருக்கக் கூடியவன் என்பதையும்; அனைத்து படைப்புகளையும் அவன் நிர்வகிக்கக்கூடியவன் என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.

அதேபோன்று ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ், அபூ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள்

إِنَّ اللَّهَ لَا يَنَامُ، وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ

நிச்சயமாக அல்லாஹ் தபாரக வ தஆலா தூங்குவதில்லை அதே போல் அவனுக்கு தூங்குவதும் பொருத்தமில்லை.

எனவே, அல்லாஹ் தபாரக வ தஆலா அவன் நாடி தூங்கவும் மாட்டான் அதேபோல் அவனை தூக்கம் மிகைத்து விடவும் முடியாது. இது, அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா தன்னுடைய பண்புகளில் பரிபூரணமானவன் என்பதையும்; அவனை தூக்கம் ஒருபொழுதும் மிகைத்து விட முடியாது என்பதையும்; மேலும் அவனுடைய ஆட்சி நிர்வாகத்தில் ஒருபொழுதும் குறைபாடு ஏற்பட முடியாது என்பதையும் காட்டுகின்றது.

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

🎧 உரையை செவிமடுக்க...
https://t.me/al_ilmush_sharee/2179

~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...

t.me/al_ilmush_sharee
🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي






بسم الله الرحمن الرحيم

I هذه دعوتنا وعقيدتنا
இதுவே எங்கள் தஃவா!
இதுவே எங்கள் அகீதா!!


9/37

அல் இமாம் அல் முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

لا نقبل من كُتُبِ الفقه, ومن كتب التفسير, ومن القصص القديمة, ومن السيرة النبوية, إلا ما ثبت عن الله أو عن رسول الله صلى الله عليه وعلى آله وسلم وليس معناه أننا نَنْبُذُهَا, أو نزعم أننا نستغني عنها, بل نستفيد من استنباطات علمائنا الفقهاء وغيرهم, ولكن لا نقبل الحكم إلا بدليل صحيح

ஃபிக்ஹு நூல்களில் உள்ள சட்டத்திட்டங்களோ, தஃப்ஸீர் புத்தகங்களில் வரும் விளக்கவுரைகளோ, பழமையான வரலாற்று கதைகளோ, நபி ﷺ அவர்களது வரலாறோ எதுவாயினும் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமகருந்தும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை தவிர ஏனைய கூற்றுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இவ்வாறு சொல்வதால் இந்த புத்தகங்களை தூக்கி எறிந்து விட வேண்டும் என்று அதற்கு பொருள் கிடையாது அல்லது இத்தகைய  புத்தகங்கள் எங்களுக்கு தேவையில்லை என்று நாங்கள் கூற மாட்டோம்.  மாறாக ஃபுகஹாக்களான எங்கள் உலமாக்களிடமிருந்தும் மற்ற உலமாக்களிடமிருந்தும் அவர்கள் கொடுத்த விளக்கங்களிலிருந்து பயன் பெறுவோம். ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு சட்ட திட்டத்தையும் ஏற்று கொள்ள மாட்டோம்.

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

ஆடியோவை செவிமடுக்க...
https://t.me/al_ilmush_sharee/2176
கால அளவு: நிமிடங்கள்

[ஸலஃபி போர்வையில் ஒளிந்து இருக்கும் முமையிஃ மற்றும் கவாரிஜ்களை பார்த்து ஏமாந்து போய் விட வேண்டாம். குர்ஆன் சுன்னாவை ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்தில் அடிப்படையில் கற்றுக்கொள்ள அதற்குரிய உண்மையான உலமாக்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.]

#هذه_دعوتنا_وعقيدتنا

~•~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...

t.me/al_ilmush_sharee
| AL ILMUSH SHAREE




بسم الله الرحمن الرحيم

தஃப்ஸீர் ஆயதுல் குர்ஸி - தொடர்

ஆயதுல் குர்ஸியில் அல்லாஹ் தபாரக வ தஆலா தன்னுடைய மகத்துவம் மிக்க பெயர்களில் ஒன்றான அல் ஹை (الْحَيُّ) என்ற பெயரை குறிப்பிட்டுள்ளான்.

அல் ஹை (الْحَيُّ) என்பது எப்பொழுதும் என்றென்றும் ஜீவித்துள்ளவன் என்ற கருத்தை தரக்கூடிய பெயராகும். அல்லாஹ்வுடைய வாழ்க்கை என்பது பரிபூரணமான வாழ்க்கை ஆகும். அதற்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை.

அல்லாஹ் தபாரக வ தஆலா கூறுகிறான்,

 وَتَوَكَّلۡ عَلَى ٱلۡحَيِّ ٱلَّذِي لَا یَمُوتُ

மரணிக்காத எப்பொழுதும் என்றும் ஜீவித்திருக்கக்கூடிய அந்த அல்லாஹ்வின் மீது நீங்கள் பொறுப்பு சாட்டுங்கள் 
 
அல் குர்ஆன்: சூரா அல் ஃபுர்கான்: 25:58

ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஒரு துஆவில் கூறினார்கள்,

أنت الأولُ فليس قبلكَ شيءٌ ، وأنت الآخِرُ فليس بعدكَ شيءٌ

அல்லாஹ்வே! நீதான் ஆரம்பமானவன் உனக்கு முன் ஒன்றும் இல்லை; அதே போல் நீ தான் இறுதியானவன் உனக்குப் பிறகு ஒன்றும் இல்லை.

நூல்: இப்னு மாஜா 3831, இது  ஸஹுஹான ஹதீஸ் ஆகும்.

எனவே الحياة அல் ஹயா அல்லாஹ்வுடைய வாழ்க்கை என்பது பரிபூரணமான வாழ்க்கை ஆகும். அதற்கு ஒரு குறைபாடும் ஏற்படாது மேலும் அதற்கு ஒரு பொழுதும் மரணமும் வர முடியாது.

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...

t.me/al_ilmush_sharee
🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي






بسم الله الرحمن الرحيم

I هذه دعوتنا وعقيدتنا
இதுவே எங்கள் தஃவா!
இதுவே எங்கள் அகீதா!!


8/37

அல் இமாம் அல் முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:


نكره عِلْمَ الكلام, ونرى أنه من أعظم الأسباب لِتَفرِقَة الأمة

நாங்கள் இல்முல் கலாம் (தத்துவவியல்) -ஐ வெறுக்கிறோம்; இந்த உம்மத்துடைய பிரிவினைக்கான முக்கியமான காரணமாக அது இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்.

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

ஆடியோவை செவிமடுக்க...
https://t.me/al_ilmush_sharee/2171
கால அளவு: நிமிடங்கள்

[ஸலஃபி போர்வையில் ஒளிந்து இருக்கும் முமையிஃ மற்றும் கவாரிஜ்களை பார்த்து ஏமாந்து போய் விட வேண்டாம். குர்ஆன் சுன்னாவை ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்தில் அடிப்படையில் கற்றுக்கொள்ள அதற்குரிய உண்மையான உலமாக்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.]

#هذه_دعوتنا_وعقيدتنا

~•~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...

t.me/al_ilmush_sharee
| AL ILMUSH SHAREE






என்றும், قيومية என்ற பண்பை உடைய قَيِّم، قَيَّام، قَيُّوم என்ற மூன்று பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, இந்தப் பெயர்களையும்,  பண்புகளையும் உள்ளடக்கிய
قَيَّامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
கையாமுஸ் ஸமாவாதி  வல் அர்ல்

என்ற வாசகத்தைக் கொண்டு ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்துள்ளார்கள்.

அதேபோல் அல்லாஹ் தபாரக வ தஆலா  الْحَيُّ الْقَيُّومُ என்ற இந்த இரண்டு பெயர்களையும் குர்ஆனில் மூன்று இடங்களில் குறிப்பிட்டுள்ளான்.  

1) ஆயதுல் குர்ஸி

2)சூரா ஆலு இம்ரான் (அல்குர்ஆன்  3:2)


 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُ

அல்லாஹ் (அவன் எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன். (என்றும்) நிலையானவன்.

3) சூரா அத் தாஹா (அல்குர்ஆன் 20:111)


 وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَيِّ الْقَيُّوْمِ‌ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا‏

நிச்சயமாக அனைத்து முகங்களும் அல் ஹையுல் கையூம் என்ற நிலையானவனும் நித்திய ஜீவனுமாகிய அல்லாஹ்விற்கே கீழ்படிந்து விட்டது. யார் அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் திட்டமாக நஷ்டமடைந்து விட்டான்.

மேலும், சுனனுந் நஸாயில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் துஆ செய்யும் பொழுது

 يا حَيُّ يا قَيُّومُ

என்ற அல்லாஹ்வுடைய இந்த இரண்டு பெயர்களை குறிப்பிட்டு அல்லாஹ்வை அழைத்து துஆ செய்யக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

🎧 உரையை செவிமடுக்க...
t.me/al_ilmush_sharee/2168

~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...

t.me/al_ilmush_sharee
🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي

Показано 20 последних публикаций.